"கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அதிவேகமாக காரை ஓட்டவில்லை,மது அருந்தவும் இல்லை" - உத்தரகண்ட் போலீசார்

0 14894

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், விபத்தின் போது காரை அதிவேகமாக ஓட்டவோ அல்லது மது அருந்தியிருக்கவோ இல்லை என உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஹரித்வார் போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங், ரிஷப் பண்ட் கார் வந்த வழிதடத்தில் 10 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததாக கூறினார்.

அவரது கார் 80 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டவில்லை என்றும் டிவைடரில் மோதிய பிறகு கார் கட்டுப்பாட்டை இழந்ததால், அதிவேகமாக செல்வது போன்று சிசிடிவியில் தெரிந்ததாகவும் தெரிவித்தார்.

ரிஷப் பண்ட் மது அருந்தி இருந்திருந்தால் காரில் இருந்து அவர் எப்படி வெளியேறி இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதனிடையே ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments